தேனி, ஜூன் 7- தேனி மாவட்டத்தில் வெட்டிக் கிளிகளை கண்காணிக்க மாவட்ட அளவில் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட் டுள்ளதாக தேனி ஆட்சியர் பல் லவி பல்தேவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு: தேனி மாவட்டத்தில் பாலை வன வெட்டுக்கிளிகளைக் கண் காணிக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், வேளாண்மை இணை இயக்குநர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானி, வேளாண் அறிவி யல் மைய விஞ்ஞானி, மாவட்ட வன அலுவலர், மாவட்ட தீய ணைப்பு அலுவலர், தோட்டக் கலை துணை இயக்குநர், செயற்பொறியாளர் (வேளா ண்மை பொறியியல்) மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாடு ஆகியோரை உறுப்பினராகவும் உள்ளடக்கிய கண்காணிப்புக்குழு தேனி மாவட்டத்தில் அமைக்கப்பட்டது.
விவசாயிகள் வயலில் வெட்டுக்கிளி கூட்டங்கள் தென்பட்டால் டின்கள், டிரம்களை தட்டி ஒலி எழுப்புவதன் மூலம் வெட்டுக்கிளிகள் பயிர்களின் மேல் அமர்வதை தடுக்கலாம். அசாடிராக்டின் என்னும் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வேம்பு சார்ந்த தாவரப்பூச்சிக் கொல்லி களைப் பயன்படுத்த வேண்டும். பாலைவன வெட்டுக்கிளிகள் பெருங்கூட்டமாக தென்பட்டால் ஒரு ஹெக்டேருககு மாலத்தி யான் 50 சதம் 1.850 லிட்டர் அல்லது மாலத்தியான் 25 சதம் நனையும் தூள் 3.7 கிலோ கிராம் அல்லது குளோர்பைரிபாஸ் 20 சதம் 1.2 லிட்டர் அல்லது லேம்டா சைக்ஹேளோத்ரின் 5 சதம் 400 மில்லி இவற்றில் ஏதேனும் ஒரு மருந்தை தெளிப் பான்கள், பெரிய டிராக்டர் மூலம் தெளித்து கட்டுப்படுத்த வேண்டும்.