தேனி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி தாலுகா செயலாளர் தோழர் சி.சடையாண்டி(63) திங்கள் கிழமை இரவு காலமானார்.
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சென்னை கிளையில் ஓட்டுநராக பணிபுரிந்த சி.சடையாண்டி, சிஐடியு தொழிற்சங்கத்தின் பால் ஈர்க்கப்பட்டு பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். பணியில் இருந்த நாட்களில் விடுமுறை எடுத்துதேனி மாவட்டத்தில் கட்சி, தொழிற்சங்கப் பணிகளில் முன்னணி தளபதியாக விளங்கினார். சிஐடியு மாவட்டப் பொருளாளர், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத்தலைவர், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றினார். போக்குவரத்து தொழிற்சங்கம் நடத்திய பல்வேறுபோராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர்ஆவார். தொடர்ந்து இரண்டு முறை தாலுகா செயலாளராக இருந்து வந்த அவருக்கு கொரோனாதொற்று கண்டறியப்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டு தேனி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த 28 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார். மறைந்த சடையாண்டிக்கு பாப்பாத்தி என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவரது இறுதி நிகழ்ச்சியையொட்டி இரங்கல் ஊர்வலம், கூட்டம் நடைபெற்றது.தோழர் சடையாண்டி மறைவிற்கு மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், பெ.சண்முகம், க.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் என். பாண்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.