தேனி, ஜூலை 11- தேனி மாவட்டத்தில் பேரூ ராட்சி செயல் அலுவலர், வங்கி மேலாளர், சிறப்பு சார்பு ஆய்வா ளர், காவலர்கள் என 115 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட் டுள்ளது. மேலும் இருவர் உயி ரிழந்தனர். தேனி ஆயுதப்படையில் பணி புரிந்துவரும் 56 வயது வாகன ஓட்டுநர், ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் தென் கரையை சேர்ந்த 32 வயது பெண் காவலர் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தமபாளையம் யாதவர் தெருவில் குடியிருக்கும் ஓடைப் பட்டி பேரூராட்சி செயல் அலு வலர், அவரது 69 வயது பெண் உற வினர், ராயப்பன்பட்டியில் 24, 44 வயது பெண்கள், சின்னமனூர் கே.கே.குளத்தை சேர்ந்த 75 வயது நபர், அழகர்சாமி நக ரைச்சேர்ந்த 36 வயது நபர், வஉசி நகரைச் சேர்ந்த 30 வயது வாலி பர், ராஜா அரிசி ஆலை தெரு வை சேர்ந்த 70 வயது முதியவர், தினசரி மார்க்கெட் பகுதியை சேர்ந்த 34 வயது பெண் என ஒன்பது பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெரியகுளம் விஎம்.அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர், கூடலூர் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி மேலாளரும், போடி திருமலாபுரத்தை சேர்ந்தவரு மான 52 வயது நபர், போடி ஜீவா நகரில் குடியிருக்கும் தனியார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர், போடி கோட்டை கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த 65-62 வயதுடைய கணவன் மனைவிக் கும் தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. முத்துலாபுரம் வடக்கு தெருவில் கணவன் -மனைவிக் கும், கம்பம் காவலர் குடியிருப் பில் காவலரின் 34 வயது மனைவி 12 வயது மகன், 10 வயது மகள் என மூவருக்கும் உறுதி செய்யப்பட் டுள்ளது. ஆண்டிபட்டி ஜக்கம்பட்டியில் 30 வயது பெண், அவரது 2 வயது குழந்தைக்கும், 43 வயது பெண் அவரது 16 வயது மக னுக்கும் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.
கம்பத்தில் நான்கு பெண்கள் மற்றும் 11 ஆண்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுப்புரத்தில் 29 வயது பெண் அவரது இரண்டு வயது மகன், 29 வயது நபர் என தேனி மாவட் டத்தில் மொத்தம் 118 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட் டுள்ளது . சின்னமனூர் ராஜா அரிசி ஆலையை சேர்ந்த 70 வயது முதியவர் வெள்ளிக்கிழமை உடல் நலக்குறைவு ஏற்பட்டு சின்னமனூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தார். கம்பம் கே.கே. பட்டியை சேர்ந்த 65 வயது முதி யவர் கடந்த 3-ஆம் தேதி சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டார். வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண் ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.