தேனி, ஜூலை 18- கொரோனாவை காரணம் காட்டி இ-சேவை மையங்கள் மூடப்பட்டதால் மாணவர்கள் அவதிப்பட்டுவருகிறார்கள் . அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் பொறியியல் கல்லூரி களில் சேருவதற்காக சேர்க்கை விண்ணப்பம் ஆன்லைன் முறையில் கொண்டுவரப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது. இதேபோல் அரச மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் சேருவதற்கு இந்த ஆண்டு ஆன்லைன் முறை கொண்டுவரப்பட்டு திங்கள் கிழமை (ஜூலை 20) முதல் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் அனுப்ப அனைத்து மாணவர்களிடமும் கணினி மற்றும் இணையதள வசதி இல்லை. இதனால் மாணவர்கள் பொது இ-சேவை மையங்களுக்குத்தான் செல்ல வேண்டும். இதேபோல் கல்லூ ரிகளில் சேருவதற்கு சாதி, வருமான, இருப்பிடம் மற்றும் முதல் பட்டதாரி சான்று உள்ளிட்ட சான்றுகள் பெறுவதற்கும் இ-சேவை மையங்களுக்குத்தான் செல்லவேண்டிய நிலை உள்ளது.
தேனி மாவட்டத்தில் பல நகராட்சிகள், பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் கொரோனா பரவியுள்ளதால் கட்டுப்படுத்தப் பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் திறக்க தடை விதிக்கப் பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. தேனி மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகத்தி லும் அரசு இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், கிராம வறுமை குறைப்புக் குழுக்கள், அரசு கேபிள் டி.வி மற்றும் கிராமப்புற தொழில் முனைவோர் (VLE) என மொத் தம் 200-க்கும் மேற்பட்ட இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை திறக்க அனுமதி அளித்தால் மாண வர்கள் பொது இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்களை அனுப்பவும், சான்றிதழ்களுக்கு விண் ணப்பிக்கவும் உதவியாக இருக்கும். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.