தேனி, ஜூன் 12- பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த நிறுவனம் மற்றும் சிறந்த சமூக சேவகர்கள் விருது பெற விண்ணப் பிக்கலாம் -தேனி மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் சமூகநலம் மற்றும் சத்து ணவுத்திட்டத் துறை மூலம் ஆகஸ்ட் 15 சுதந்திர தினவிழா அன்று பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த நிறுவனம் மற்றும் சிறந்த சமூக சேவ கர்களுக்கு சுதந்திர தினவிருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத் தன்று பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த நிறுவனம் மற்றும் சிறந்த சமூக சேவகர்களுக்கான விருது முத லமைச்சரால் வழங்கப்பட்டு வருகிறது. 2020- ஆம் ஆண்டில் சுதந்திர தினத்தன்று விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருது பெற தமிழ்நாட்டை பிறப்பிட மாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.
குறைந்த பட்சம் ஐந்தாண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவ டிக்கை மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மகளிர் நல னுக்கு தொண்டாற்றும் வகையில் தொட ர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனங்களிடமிருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சமூக சேவை நிறுவனம் அரசு அங்கீ காரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்த விவரம் 1 பக்க அளவில் விண்ணப்ப தாரரின் கருத்துரு தமிழ்-1, ஆங்கிலம்-1 மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்து டன் சமர்ப்பிக்க வேண்டும். மேற்குறிப்பிட் டுள்ள விதிமுறைகளின்படி உரிய முறை யில் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராக ரிக்கப்படும். மேற்கண்ட தகுதிகளை உடையோர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கம், 3-ம் தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் உரிய படி வத்தினை பெற்று வருகின்ற 12.6.2020க்குள் விண்ணப்பிக்கலாம்.