தேனி:
கொரோனா ஊரடங்கால் கடந்த ஆறு மாதகாலமாக இடுக்கி மாவட்டத்தில் உள்ளதமிழகத்தைச் சேர்ந்த ஏல விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்கள், கன ஓட்டிகள் என என 20 ஆயிரம் பேரின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. ஏல தோட்டப்பணிகளுக்கு விவசாயிகள், தொழிலாளிகளை நிபந்தனையின்றி குமுளி, கம்பம் மெட்டு வழியாக செல்வதற்கு அனுமதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏரியா செயலாளர் ஜி.எம்.நாகராஜன் தலைமை வகித்தார். விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.வி. அண்ணாமலை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.ஜெயராஜ், சிஐடியு கம்பம் ஏரியா ெசயலாளர் பி.ஜெயன், எஸ்.சின்னராஜ் வாகன ஓட்டுனர் சங்கத் தலைவர் கண்ணன், செயலாளர் ஈஸ்வரன் பொருளாளர் பிபாகரன் உட்படநூற்றுக்கணக்கானோர்கள் கலந்து கொண்டனர்.