tamilnadu

பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு 700 பேர் வங்கிக் கணக்குகள் முடக்கம்?

தேனி:
தேனி மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித்திட்டத்தில் நடைபெற்றமுறைகேடு தொடர்பாக 700 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.11 லட்சம் வரை மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .

தேனி மாவட்டத்தில் பிரதமரின் நிதி உதவித் திட்டத்தில் நடந்த முறைகேடுகளைக் கண்டறிய வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை கொண்ட ஆய்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.முதற்கட்ட விசாரணையில் சுமார் 700 பேர் முறைகேடாக சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ.11 லட்சம் மீட்கப்பட்டு அரசின் கணக்கில் திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. 

;