tamilnadu

img

ஓய்வு வயது அதிகரிப்பை கைவிடக்கோரி தேனியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி ,மே.8- இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் வகையில் அரசு ஊழியர்களின் ஓய்வு  வயது அதிகரிப்பை  கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்கத்தின் சார்பில்  பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது . சரண்டர் விடுப்பு ரத்து ,அகவிலைப்படி உயர்வு ரத்து ,வருங்கால வைப்பு நிதிக்கான  வட்டிக்குறைப்பு போன்ற நடவடிக்கைகளை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ,பெருந்திட்ட வளாகம் ,ஊராட்சி ஒன்றிய  அலுவலகங்கள் ,வட்டாட்சியர் அலுவல கங்கள், சார் நிலை கருவூலம் ,மாவட்ட கல்வி  அலுவலகம் என பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .ஆர்ப்பாட்டங்க ளில் மாவட்ட தலைவர் சி.நிலவழகன் ,மாவட்ட  செயலாளர் ம.முகமது அலி ஜின்னா ,அரசு கூட்டுறவு சங்க மாநில செயலாளர் ராமகி ருஷ்னன் ,,மாவட்ட இணை செயலாளர் உடை யாளி,சத்துணவு ஊழியர் சங்க மாநில பொ ருளாளர் பெ.பேயத்தேவன் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.

;