tamilnadu

தீ விபத்தில்  20 ஆடுகள் பலி

தேனி, மே 16-  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பாலசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரசூரன்(55) விவசாயி.இவர் தனது வீட்டின் பின்புறம் கொட்டம் அமைத்து 25 க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை ஆட்டுக் கொட்டத்தில்  தீ விபத்து ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். மேலும் இதுகுறித்து ஆண்டிபட்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பு கொட்டம் முழுவதும் எரிந்து சாம் பலானது. இந்த விபத்தில் 20 ஆடுகள் தீயில் கருகி பலியானது மேலும் சில ஆடுகள் பலத்த காயமடைந்தக. தீயை அணைக்க முயன்ற வீரசூரன் காயம டைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

;