வேலூர், ஆக. 12- கேரளாவில் பெய்து வரும் கனமழை யால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க, அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், 250 பேர் கேரளா மாநிலம் சென்றுள்ளனர். கேரளா மாநிலத்தில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இத னால் கோழிக்கோடு, கண்ணனூர், குருவா யூர், எர்ணாகுளம், இடுக்கி உள்ளிட்ட பகுதி களில், பலத்த மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மக்கள் பாதித்துள்ள னர். அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடு முறை விடப்பட்டு, ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை யும் விடப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து கேரளா மாநிலத்துக்கு செல்லும் பல ரயில் கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், “வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த, தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தி லிருந்து, துணை கமாண்டர் ஜித்தேஷ் தலைமையில், 25 வீரர்கள் கொண்ட, 10 குழுக்களை சேர்ந்த, 250 பேர், கேரளா மாநி லம், திருச்சூர், கோழிக்கோடு, பாலக்காடு, எர்ணாகுளம், கோட்டையம் பகுதிகளுக்கு சென்றுள்ளனர். அவர்கள் அங்கு தங்கி, வெள்ளப்பெருக்கு சரியாகும் வரை, மீட்பு பணிகளில் ஈடுபடுவர்,” என, பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.