tamilnadu

img

தெலுங்கானா: வாராங்கல் அருகே கிணற்றில் 9 சடலங்கள் மீட்பு

தெலுங்கான மாநிலம் வாராங்கல் அருகே உள்ள ஒரு கிணற்றில் 3 வயது குழந்தை மற்றும் 8 புலம்பெயர் தொழிலாளர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் அருகே உள்ள கோரேகுந்தா கிராமத்தில், நேற்று 4 சடலங்கள் மீட்கப்பட்டது. இதை தொடர்ந்து, இன்று 5 சடலங்கள் மீட்கப்பட்டது. போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் மேற்கு வங்கம் மற்றும் பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் என்றும்,  கோணிப்பை தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்துவந்தவர்கள் என்றும் தெரியவந்தது.

இதில் 3 வயது குழந்தை உட்பட 5 பேர், மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து தெலுங்கானாவுக்கு வந்து வேலை செய்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த 9 பேரும் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டார்களா? அல்லது கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.