தென்காசி, ஜூன் 13- இ-பாஸ் குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்ப டும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயா ளன் எச்சரிக்கை விடுத்துள் ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது: தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க மா வட்ட நிர்வாகம் மக்கள் ஒத்து ழைப்போடு பல்வேறு கொ ரோனா தடுப்பு நடவ டிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. மேலும் அவசர தேவைகளுக்காக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பயணம் செய்பவர்களுக்கு குறிப்பாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட் டங்களில் இருந்து வரு பவர்களுக்கு இ-பாஸ் வழங் கப்படாது என்ற தவறான தகவல் சமூக வலைத்த ளங்கள் மூலமாக பரப்பப் பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறான செய்தி. இதுபோன்ற தவ றான செய்திகளை பரப்பு வர்கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும். வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து இறப்பு, திருமணம், மருத்துவ சிகிச்சை போன்ற முக்கிய காரணங்களுக்காக இ-பாஸ் கோருபவர்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து இ-பாஸ் வழங்கப் பட்டு வருகிறது. மேலும் உங்களது பகுதியில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்க ளிலிருந்து வருவோரின் விப ரங்களை மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை தொலை பேசி எண் 04633- 290548 ஐ தொடர்பு கொண்டு தெரி விக்கவும். இவ்வாறு ஆட்சியர் கூறி யுள்ளார்.