tamilnadu

தினக் கூலி ரூ.600 வழங்கக் கோரி  விவசாயத் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

தென்காசி: அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் யூனியூன் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூறு நாள் வேலை அட்டை வழங்கிய அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், தினக் கூலி ரூ 600 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை முழக்கம் வைக்கப்பட்டது. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தி.கணபதி, விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் குத்தாலிங்கம், ஞான பிரகாசம், முருகையா, வேலம்மாள், சந்திரசேகரன், வனிதா, பேச்சிமுத்து, தம்பித்துரை, புஸ்பா, ராமாத்தாள், உண்ணாமலை, செல்லம் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.