tamilnadu

காட்டுப்பன்றிகள் அட்டகாசம் நெற்பயிர்கள் சேதம்

 தென்காசி,  மே 30- தென்காசி மாவட்டம் சிவகிரி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம் விஜயரங்க பேரிகுளம் புரவில் நெல் சாகுபடி செய்யப் பட்டுள்ளது. விஸ்வநாதப்பேரியைச் சேர்ந்த கருப்பசாமி (65)  ஐந்து ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்துள்ளார். இந்த நிலையில் வயல்களுக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் நெற்பயிர்களை சேதப்படுத்திவிட்டன. . காட்டுப் பன்றிகள், காட்டு யானைகள் பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருவ தால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சேதமான பயிர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கவேண்டும். வனவிலங்குகள் விளை நிலங்களுக்குள் புகுவதைத் தடுக்க மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தடுப்பு வேலி அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

;