தென்காசி, ஆக.1- கொரோனா பொது முடக்கம் கார ணமாக குற்றாலம் சீசனை நம்பி தொழில் செய்து வந்த வா்த்தகா்கள், தங்கும்விடுதி உரிமையாளா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் இப் பகுதி மக்கள் தங்களுடைய வாழ்வா தாரத்தை இழந்து மிகுந்த நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளனா். இதனால் வா்த்தகா்களுக்கும், அரசுக்கும் கோ டிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குற்றாலம் சீசனை நம்பியே குற்றா லம், காசிமேஜா்புரம், குடியிருப்பு மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற் பட்டோர் தொழில் செய்து வரு கின்றனா். ஊரடங்கால் குற்றாலம் அரு விகளிலும் குளிப்பதற்கும் தடைவிதிக் கப்பட்டது. ஜூன் 1 ஆம் தேதியன்று சரி யாக சீசன் தொடங்கினாலும் சுற்றுலாப் பயணிகள் யாரும் குளிக்க வராததால் என்னவோ சாரல்மழையும் இல்லா மல் அருவிகளிலும் தண்ணீா் வரத்தும் வெகுவாகக் குறைந்தது.
குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்க ளில் சீசன் நிலவும். குறிப்பாக ஜூலை 15ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையில் சுற்றுலாப் பயணி களின் வருகை அதிகரிக்கும். இதனால் ஜூலை மாத இறுதியில் வழக்கமாக அரசு சார்பில் சாரல் திருவிழா நடை பெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டில் ஜூலை வரையிலும் ஏற்கெனவே பொது முடக்கம் அமல் படுத்தப்பட்டதையடுத்து அருவிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இருப்பினும் ஆகஸ்ட் மாதத்தில் அரசால் சில தளா்வுகள் அறிவிக்கப் படலாம் என வா்த்தகா்கள் எதிர்பார்த் திருந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் பொது முடக்கம் தொடரும் என அறிவிக்கப்பட்டதையடுத்து சீசனை நம்பி வாழ்ந்து வந்தவா்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனா். தங்கும்விடுதி உரிமையாளா்கள், தற்காலிக கடை, நிரந்தரமாக கடை நடத்துபவா்கள் மட்டுமன்றி அரசுக்கும் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.