தென்காசி ஜூலை 14- சுரண்டையில் தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக நுண்நிதி நிறுவனங்களின் கட்டாய கடன் அதிக வட்டி வசூலுக்கு எதிராக சிஐடியு பீடித்தொழிலாளர் சங்கம் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. ஆலங்குளம் காவல்துறை டி.எஸ்.பி முன்முயற்சியில் செவ்வாய்க்கிழமை வீ.கே.புதூர் தாலூகா அலுவலகத்தில் வட்டாட்சி யர் மகாலெட்சுமி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சுரண்டை காவல்துறை ஆய்வாளர் மாரிஸ்வரி ,சிஐடியு மாவட்ட தலைவர் எம்.வேல்முரு கன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தி.கணபதி , ஆலங்குளம் தாலூகா செயலாளர் குணசீலன், கீழப்பாவூர் ஓன்றிய செயலாளர் தங்கம், பீடித்தொழிலாளர் சங்க ஓன்றிய செயலாளர் ஆரியமுல்லை, சிஐடியு நிர்வாகிகள் முருகேசன், அண்ணாத்துரை, சுரண்டை பீடித் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பொட்டுச்செல்வம், செயலாளர் பொற்செல்வி, பொருளாளர் முத்து லெட்சுமி மற்றும் நூண்நிதி நிறுவ னங்களின் ஊழியர்கள் பங்கேற்ற னர்.
கூட்டத்தின் முடிவாக, கொரோனா காலம் முடியும் வரை நுண்நிதி நிறுவனங்களின் ஊழி யர்கள் சுரண்டை நகரத்தில் கடன் வசூல் செய்திட வர கூடாது. கூடுதல் வட்டி போடுவேன் என்று மிரட்டக் கூடாது. போனில் கடன் பணம் கேட்டு மோசமாக பேசக் கூடாது, கடன் பணம் கட்ட வாய்ப்பு உள்ளவர்கள் நுண்நிதி அலுவலகத்தில் கட்டிக் கொள்ளலாம். யாரும் அவர்களை தடுக்க கூடாது, நுண்நிதி நிறுவனங்க ளின் ஊழியர்கள் வட்டாட்சியர் தலை மையில் நடைபெற்ற கூட்ட முடிவை மீறி வசூல் செய்திட வந்தாலும் சுய உதவிக்குழு பீடி பெண்களிடம் மோச மாக பேசி கடன் கூடுதல் வட்டி கேட்டு மிரட்டி வசூல் செய்திட சுரண்டை ஊருக்குள் வந்தாலும் காவல் துறை அதிகாரிகள் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதை அனைவரும் ஏற்று கொண்டனர் .இதனால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.