tamilnadu

இளைஞர் கொலை: காவல் ஆய்வாளர் மீது வழக்கு

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே தட்டார்மடம் பகுதியை சேர்ந்த வியாபாரி செல்வன் என்பவர் செப்.17 அன்று காரில் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து படுகொலை செய்யப்பட்ட செல்வனின் தாயார் எலிசபெத் நெல்லை எஸ்.பியிடம் புகார் மனு கொடுத்தார். இதன் பேரில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் உட்பட மேலும் சிலர் மீது (107, 336, 302, 364) கொலை வழக்கு உட்பட 4 பிரிவுகளில் நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

;