தூத்துக்குடி,ஜூலை 14- தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளம் காமராஜர் தெருவில் வசித்து வருபவர் பால் பாண்டி (65). இவர் பனைத்தொழி லாளி. பனைஓலை மூலமாக பல்வேறு உருவச் சிலையை செய்து வருகிறார். கடந்த மூன்று வருடங்க ளாக இவர் காமராஜர் 7 அடி சிலை, அப்துல் காலம் சிலை, விவசாயி , பனை மரத் தொழிலாளி, தாஜ்மகால், கிறிஸ்தவ ஆலயம், கோபுரம் உள்பட பல்வேறு வடிவங்களை பனை ஓலை மூலம் செய்துதுள்ளார். தற்போது காமராஜருடன் இரண்டு பள்ளிக் குழந்தைகள் புத்தகப்பையை தூக்கிக் கொண்டு பள்ளி செல்லும் காட்சியை பனை ஓலையில் உருவாக்கியுள்ளார். இதுகுறித்து பால் பாண்டி கூறுகையில், நான் வருடந்தோறும் பல்வேறு வடிவங்களை பனை ஓலையில் செய்து வருகிறேன். ஏற்கனவே காம ராஜர் 7 அடி உயரச் சிலையை பனை ஓலையில் செய்து வைத்திருந்தேன் . அதை நான் தினமும் பார்க்கும் போது காமராஜர் தனியாக நிற்பது போலவே எனக்குத் தெரிந்தது. கல்விக் கண் தந்த காமராஜரை பள்ளி குழந்தைகளோடு சேர்த்துப் பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்றார். அவரது திறமையை பலரும் பாராட்டி வருகின்றனர்.