tamilnadu

சாலை விபத்தில் உப்பளத் தொழிலாளி பலி

தூத்துக்குடி, ஜூன் 24- தூத்துக்குடி அருகேயுள்ள வேப்ப லோடை, சுப்பிரமணிய புரத்தைச் சேர்ந்தவர்  பாலசுப்பிரமணியன் (60), உப்பளத்தில் வேலை பார்த்து வந்தார். செவ்வாயன்று மாலை வேலை முடிந்து தனது மோட்டர் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பனையூர் கிராமம் அருகே வந்தபோது, விளா த்திகுளத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த வேன்,  மோட்டர் சைக்கிள் மீது மோதி யது. இவ்விபத்தில் படுகாயம் அடைந்த பால சுப்பிரமணியன், சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். இதுகுறித்து குளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்து  தொடர்பாக வேனை ஓட்டி வந்த விளாத்தி குளம், சிதம்பர நகரைச் சேர்ந்த குமார் (40)  என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.