tamilnadu

கயத்தாறு அருகே பெண் கடத்தல்

தூத்துக்குடி, ஜூன் 27- கயத்தாறு அருகே மைனர் பெண்ணை கடத்தியதாக வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.  தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள கன்னத்துபுதுக்குடி பகுதி யினை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (45). இவரது மகள் பிரியா (17) (பெயர் மாற் றப்பட்டுள்ளது). இவர் சனிக்கிழமை யன்று மாலை தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்த போது, திருநெல்வேலி யை சேர்ந்த முருகன் மகன் சங்கர் (27) என் பவர் தனது பைக்கில் கடத்திச்சென்று விட்டாராம். இது குறித்து பாலசுப்பிரமணி யன் கயத்தாறு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் முத்து வழக்குப்பதிவு செய்து,விசாரணை நடத்தி வருகின்றார்.