துரைமுருகன் கேள்வி
சென்னை,மார்ச் 19- தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய எதிர்க் கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசிய தாவது: “கொரோனா வைரஸ் நாட்டையே புரட்டிப் போட்டு விட்டது. காரணம் அனைத்து இடங்களிலும் வியாபார நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சினிமா தியேட்டர்கள், கல்விக் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. சிறு தொழில் வியா பாரங்கள் மூடிக் கிடக்கின்றன. லட்சக்கணக்கான முட்டை கள் வீணாகி விட்டன. சாலைகள் காலியாக கிடக்கின்றன. கோவில்கள், திருமண விழாக்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மூடப்படாமல் இருப்பது டாஸ்மாக் கடைகளும் சட்டமன்றமும்தான். இதைத் தவிர மற்ற எல்லாம் மூடப்பட்டுவிட்டது. இதன் விளைவு கூலி வேலை பார்க்க முடியாமல் மக்கள் பரிதவிக்கிறார்கள். மூட்டை தூக்குபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கூலி வேலை செய்ப வர்கள், வண்டி இழுப்பவர்களுக்கு அரசு ஏதாவது உதவி செய்ய முடியுமா? மார்ச் மாதம் என்பதால் வியாபாரி கள் வரி செலுத்த வேண்டும். இப்போது அவர்களிடம் காசு இல்லை. எனவே ஆறு மாத டேக்ஸ் அவகாசம் கொடுக்கப்படுமா? இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் வீரமணி, “வரிச்சேவை சலுகையை ஜி.எஸ்.டி. கவுன்சில் தான் முடிவு எடுக்க வேண்டும். அங்கிருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. மக்கள் அதிகம் கூடும் வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் தான் மூடப்பட்டுள்ளன. சிறு வணிகம், கடைகளில் வணிகம் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது” என்றார். அமைச்சர் டி. ஜெயக்குமார், “வரிச்சேவை சலுகை அறிவிப்பை மாநில அரசால் அறிவிக்க இயலாது. அதை முடிவெடுப்பது ஜி.எஸ்.டி. கவுன்சில் தான். முதல் அமைச்சர் மூலமாக இது தொடர்பாக அழுத்தம் கொடுக்கப் படும். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்றார்.