தூத்துக்குடி, ஜூன் 6 தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தெற்கு கோனார் கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகள் சங்கீதா (20). இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களிடம் காண்பித்தும் பார்வையை சரி செய்ய முடியவில்லையாம். இதனால் மனவேதனையில் இருந்து வந்த சங்கீதா வெள்ளியன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொ ண்டார். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.