tamilnadu

img

தூத்துக்குடியில் மீண்டும் பேருந்து சேவை

தூத்துக்குடி, ஜூன் 1- தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து திங்க ளன்று காலை பேருந்து சேவை தொடங்கியது. இதில் திருநெல் வேலி, தென்காசி, கன்னியாகுமரி உட்பட 4 மாவட்டங்களுக்குள் பயணிக்கலாம். பிற ஊர்களுக்கு செல்ல இ-பாஸ் அவசியம். 50 சத வீத பேருந்துகள் 60 சதவீத பயணி களுடன் இயக்கப்படுகிறது. பேரு ந்துகளில் பயணம் செய்வோர் கட் டாயம் மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட் டுள்ளது. பழைய பேருந்து கட்ட ணமே வசூல் செய்யப்படுகிறது. பயணிகள் பேருந்தில் ஏறுவதற்கு முன்பு கைகளை கழுவுவதற்கு கிருமிநாசினிகள் வைக்கப்பட் டுள்ளது. பேருந்தில் ஏறுவதற்கு முன்பு காய்ச்சல் உள்ளதா என் பதை அறிய மானிட்டர் மூலம் வெப்ப நிலை அறிந்து கொள் ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.