தமிழ்நாட்டில் கிராம உதவியாளராக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை ஸ்ருதி என்பவர் தேர்வாகியுள்ளார்.
தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் அன்மையில் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் கிராம உதவியாளர் பதவிக்கு தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்த திருநங்கை ஸ்ருதி என்பவர் தேர்வாகியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் மேலகரந்தை கிராம உதவியாளர் பணிக்கான நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்.