tamilnadu

img

தூத்துக்குடி அருகே துயரம் வேன் கவிழ்ந்து குழந்தை உட்பட 6 பேர் பலி

தூத்துக்குடி:
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த 18பேர் வேனில்புதனன்று திருச்செந்தூர் சென்றுள்ளனர். நள்ளிரவு 1.30 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகே சென்றபோது ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள பாலத்தில் மோதி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இவ்விபத்தில் கருத்ததுரை மகன் அருணாச்சலபாண்டியன் (35), அவரது  3 மாத கைக்குழந்தை அனிஷ்பாண்டி,  பாண்டியன்நகர் காளிராஜன் மனைவி பாக்கியலட்சுமி (45), ராமன் மனைவி முத்துலட்சுமி (65), சுகுமார் மகன் ஜெகதீஸ்வரன் (12), கோபாலகிருஷ்ணன் மகன் நித்திஷ் (4) ஆகிய 6பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.மேலும் இவ்விபத்தில் வேன் ஓட்டுனர் முருகேசன் (42)  உட்பட 12பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;