tamilnadu

தூத்துக்குடியில் கொரோனாவுக்கு பெண் உட்பட 2 பேர் பலி

தூத்துக்குடி, ஜூன் 27- தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொ ரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த பெண்  உட்பட 2 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் கொ ரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக அதி கரித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டணம், தேங்காய் பண்டகசாலைத் தெருவைச் சேர்ந்தவர் முத்தமிழ்செல்வன். இவரது  மனைவி பாத்திமா (49), உடல்நலக்கு றைவால் வெள்ளியன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்தபோது அவ ருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கொரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளி யன்று இரவு உயிரிழந்தார். இதுபோல் கோவில்பட்டி, பாரதிநகர் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் சுப்பையா (65) என்பவர் உடல்ந லக்குறைவால் கடந்த 25 ஆம் தேதி கோவி ல்பட்டி அரசு மருத்துவமனையில் அனும திக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவரது உடல்நிலை மோசமான தால், அவர்  தூத்துக்குடி அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் வெள்ளியன்று இரவு அவர் உயிரிழந்தார்.  இதன் மூலம் தூத்துக்குடியில் கொ ரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்க ளின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.