tamilnadu

img

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் தம்பதியர் தீக்குளிக்க முயற்சி கந்துவட்டிக் கொடுமையால் விபரீதம்

தூத்துக்குடி, ஆக.12- தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சூழவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் கணே சன். இவரது மனைவி வேளாங்கண்ணி. இந்த தம்பதியர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஜோசப் என்ப வரிடம் வட்டிக்கு ரூ.4 லட்சம் கடன் வாங்கி னாராம். இதற்காக அவர் ரூ.3 லட்சம் வரை திருப்பி செலுத்தியுள்ளார். ஆனால் அவர் கொடுத்த தொகை வட்டிக்கு சரியாகி விட்டது. அசல் தொகை அப்படியே உள்ளது என்று ஜோசப் கூறினாராம். மேலும் கடன் தொகை முழுவதையும் திருப்பி செலுத்த வேண்டும் என வற்புறுத்தி வருகிறாராம். இதனால் மனவேதனை அடைந்த கணே சன், தனது மனைவி மற்றும் குழந்தைகளு டன் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத் திற்கு வந்தனர். அப்போது எதிர்பாராத வித மாக அவர்கள் தங்களது உடலில் மண் ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். இதனை கண்ட காவல்துறை யினர் அவர்களை தடுத்து நிறுத்தி சிப்காட் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். கந்துவட்டி கொடு மையால் ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதி யர், குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.

;