tamilnadu

img

தூத்துக்குடியில் வெடிகுண்டு வீச்சு... காவலர் - ரவுடி உயிரிழப்பு...  

தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள மனக்கரை பகுதியில் அடைந்த வனப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஸ்ரீவைகுண்டம் இரட்டை கொலை வழக்கீழ் தொடர்புடைய துரைமுத்து என்ற ரவுடி பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

விரைந்து சென்ற போலீசார்கள் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மறைவாக இருந்த துரைமுத்து போலீசார்கள் மீது நாட்டு  வெடிகுண்டை வீசினார். இதில் சுப்பிரமணியம் என்ற போலீசார் சம்பவ இடத்திலேயே பலியானர். வெடிகுண்டு வீசிய ரவுடி துரைமுத்து மற்றும் மற்றொரு போலீசார் உட்பட 2 பேர் படுகாயமடைந்த நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மருத்துவமனையில் ரவுடி துரைமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

;