தூத்துக்குடி,ஜூன் 30- தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகேயுள்ள கலைஞானபுரம் கிரா மத்தைச் சேர்ந்தவர் முனிய சாமி மகன் பரமசிவன் (38). இவர் திங்களன்று மதியம் தனது வீட்டருகே உள்ள தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அப் போது அவரது வீட்டிற்குள் நுழைந்த மர்ம ஆசாமி, வீட்டின் உள்ளே பீரோவில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகையை திருடிச் சென்று விட்டாராம். இதன் மதிப்பு ரூ.1லட்சத்து 12 ஆயிரம் ஆகும். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் செய் தார். புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.