tamilnadu

img

தேயிலை வாரியத்தின் தேநீர் மையம் துவக்கம்

நீலகிரி, பிப்.21- உதகை பழங்குடியினர் பண்பாட்டு  மையத்தில் இந்திய தேயிலை வாரியம்  சார்பில், தேயிலை வாரியத்தின் தேநீர்  மையம் துவங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகை பழங்கு டியினர் பண்பாட்டு மையத்தில் வியாழ னன்று இந்திய தேயிலை வாரியம்  சார்பில், தேநீர் மையத் துவக்க நிகழ்ச்சி யானது மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்ன சென்ட் திவ்யா முன்னிலையில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியை இந்திய தேயிலை  வாரிய செயல் இயக்குநர் எம்.பாலாஜி  ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து  கூறியதாவது, தென் இந்திய தேயிலை  வாரியத்தின் மேம்பாட்டிற்காக பல் வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து  செயல்படுத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் சிறப்பு  வகையான தேயிலை தூள்களை  நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளிடையே பிரப லப்படுத்தும் நோக்கில் தென் இந்திய  தேயிலை வாரியம் சார்பில்  உதகையில் உள்ள மலைப்ப குதி மேம்பாட்டு திட்டம் பழங்குடியி னர் பண்பாட்டு மையத்தில் தேநீர் மையத்தை செயல்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத் திலுள்ள இளைஞர்களிடையே வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையிலும், வேலையற்ற சிறு  தேயிலை விவசாய இளைஞர்க ளிடையே புதிய தொழில் முனையும் நோக்கில் இந்த தேநீர் மையம் செயல்ப டுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.  இந்நிகழ்ச்சியில் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்ட னர்.