தூத்துக்குடி, ஆக.31- தமிழகத்தில் தேசிய கல்விக் கொள் கையினை அமல்படுத்த எதிர்ப்பு தெரி வித்து தூத்துக்குடி மாவட்டம் முழுவ தும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் ஆர்ப் பாட்டம் நடத்தி வருகின்றனர். இதில் தூத்துக்குடி அலாய்சியஸ் மேல்நிலைப் பள்ளி ஆசிரியைகள், கைகளில் பதாகை கள் ஏந்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட் டம் பள்ளி வளாகத்திற்குள் நடந்தது. இதில் ஆசிரியைகள் முகக் கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.