தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிறன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4 போட்டிக்கான எழுத்துத் தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, தூத்துக்குடி வட்டாட்சியர். ஜான்சன் தேவசகாயம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.