ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2018ம் ஆண்டு 100 நாட்களாக பொதுமக்கள் அமைதியான முறையில் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர். இதையடுத்து போராட்டத்தின் 100 வது நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் பேரணியாகச் சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து கடந்த 2018 மே 28ம் தேதியன்று தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசியபசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து. தேசிய பசுமை தீர்ப்பயாம் ஓய்வு பெற்ற நிதிபதி தருண் அகல்வால் தலைமையில் குழு ஒன்றை நியமித்தது. அந்தகுழு ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அழித்த அறிக்கையின் அடிப்படையில் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதேசமயம் ஆலையை திறக்க அனுமதி வழங்க கோரி ஸ்டெர்லைட் நிர்வாகமும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க இடைக்கால தடை வித்தது. அத்துடன் வழக்கை விசாரிக்க பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு வேதாந்தா நிறுவனத்தை வலியுறுத்தியது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரியும், ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு ஸ்டெர்லைட் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மனு தாக்கல் செய்தால் தங்கள் தரப்பை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.