tamilnadu

img

மாணவியை கடத்தி திருமணம்..   வாலிபர் கைது.. 9 பேர் மீது வழக்குப் பதிவு....

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். மேலும்அவரது உறவினர்கள் 9பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

தூத்துக்குடி தூத்துக்குடி திரேஸ்புரம் உடைமரத் தெருவைச் சேர்ந்தவர் அசோக் மகன் புல்டன் (26), இவருக்கு முகநூல் மூலம்பிளஸ் 1 படிக்கும் 15 வயது சிறுமியுடன் பழக்கம்ஏற்பட்டுள்ளது. அந்த சிறுமிக்கு பெற்றோர் கிடையாது, தாத்தாவின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் புல்டன் கடந்த 14.7.2021 அன்று மாணவியை கடத்திச் சென்று தனதுஉறவினர்கள் முன்னிலை யில் திருமணம் செய்து கொண்டார்.
இதனிடையே மாணவி யை காணவில்லை என்று புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவரது தாத்தா புகார் செய்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சத்தியபாமா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார். விசாரணையில், சிறுமியை கடத்தி திருமணம் செய்த புல்டனனை கைது செய்தார். அவர் மீது போக்சோ மற்றும் குழந்தைதிருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக அவரது தாயார் ஐரின், உறவினர்கள் அந்தோணியம்மாள், கல்யாணி,  மேரி, ராணி, கிளாட்வின், தேவி, கிரெஸிங்டன் ஆகிய 9பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

;