தூத்துக்குடி:
கட்டுமானம், உடல் உழைப்புதொழிலாளர்களுக்கு வழங்கப்படாத கொரோனா நிவாரண தொகையை உடனே வழங்கவேண்டும் கோரி சிஐடியு சார்பில் காத்திருப்பு போராட்டம்தூத்துக்குடி கோரம்பள்ளம் தொழிலாளர் துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் இரா.பேச்சிமுத்து தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.ரசல்,கட்டுமான சங்கம் சோ.மாரியப்பன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் குமாரவேல், ஆட்டோ முருகன், பெருமாள், சிபிஎம் மாநகர் செயலாளர் தா.ராஜா, புறநகர் செயலாளர் பா.ராஜா, ஒன்றிய செயலாளர் சங்கரன், வாலிபர் சங்க செயலாளர் எம்.எஸ்.முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.