tamilnadu

நெல்லை - சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தூத்துக்குடி, ஏப்.17 -நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு நெல்லை-சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், பொது தேர்தல்2019, முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க திருநெல்வேலி மற்றும் சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.வண்டி எண்.06024 திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து 18.4.2019 அன்று பிற்பகல் 01.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 03.00 மணிக்கு சென்னைஎழும்பூர் சென்றடையும். இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, விருத்தாச்சலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் மாம்பழம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

;