tamilnadu

img

காவல்துறையினருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

 சேலம், செப். 25- சேலத்தில் காவல்துறை யினருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்றது.  சேலம் மாநகர காவல் துறையில் சுமார் 1,500க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் காவலர் முதல் மாநகர காவல் ஆணையாளர் வரை வரு டாந்திர துப்பாக்கி சுடும் பயிற்சி சேலம் கோரிமேடு அருகில் உள்ள ஏற்காடு மலை அடிவாரத்தில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி புதனன்று நிறைவடைந் தது. இப்பயிற்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர். இதில் சேலம் மாநகர ஆயுதப்படை உதவி ஆணையர் இளங் கோவன், காவல் ஆய்வாளர் கள் பாஸ்கர், சரவணன் ஆகி யோர் பயிற்சி அளித்தனர்.