tamilnadu

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவர் கைது

தூத்துக்குடி,ஜூலை 18- தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதி நகரைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் சுந்தர்ராஜ் (59), கூலித் தொழிலாளி. இவர் அப்பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக அச்சிறுமி யின் தாயார் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சுந்தர்ராஜை கைது செய்தனர்.