districts

பாலியல் வன்கொடுமை: முதியவர் கைது

திருவள்ளூர், ஜூலை 27- சோழவரம் அருகே உள்ள புதிய எருமை வெட்டி  பாளையம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி 4 ஆம்  வகுப்பு படித்து வந்தார். தாய்-தந்தையை இழந்த அவர் செங்கல் சூளையில் வேலைபார்த்து வரும் அத்தையுடன் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.  கடந்த 24 ஆம் தேதி இயற்கை உபாதை கழிக்க மாணவி சென்ற போது பாம்பு கடித்தது. இதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  இந்த நிலையில், பாம்பு  கடித்து இறந்த மாணவியை  ஏற்கனவே முதியவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை அப்பகு தியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் பகிர்ந்து வந்தனர். இந்த வீடியோ சமூக வலை தளத்திலும் பரவ தொடங்கி யது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமி யின் உறவினர் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.  பின்னர், காவல்துறையி னர் நடத்திய விசாரணை யில் அதே பகுதியை சேர்ந்த  78 வயது முதியவர் பாலு,  சிறுமியை பாலியல் பலாத் காரம் செய்தது உண்மை என தெரியவந்தது.  இதற்கிடையே பாம்பு  கடித்து மாணவி இறந்து விட்டாலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் பாலு, வீடி யோவை சமூக வலைதளங் களில் பகிர்ந்த 6 பேர் மீதும்  போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து புழல் சிறை யில் அடைத்தனர்.