tamilnadu

img

கல்வி கொள்கையை எதிர்த்து கருத்தரங்கம்

தூத்துக்குடி, செப். 2 தேசியவரைவு கல்வி கொள்கையை எதிர்த்து தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்கம், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் ,தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் ,தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், இந்திய மாணவர்கள் சங்கம் ,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ,பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் ,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் தோழர் எம்.ஆர்.அப்பன் இல்லத்தில் உள்ள தோழர்  டி.கே. சுந்தரபாண்டியன் அரங்கத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் தே முருகன் தலைமை வகித்தார். கல்வியாளர் ஜே கிருஷ்ணமூர்த்தி , மூட்டா சங்க பொதுச் செயலாளர் பேராசிரியர் எம். நாகராஜன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு பவுல் ஆபிரகாம் நன்றி உரை ஆற்றினார். இந்த கருத்தரங்கில் தேசிய வரைவுகல்வி கொள்கையினால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசப்பட்டது.