tamilnadu

ரூ.15 லட்சம் புகையிலைப்  பொருட்கள் பறிமுதல் : 3 பேர் கைது

தூத்துக்குடி, ஆக.13- தூத்துக்குடி ஸ்டேட் பாங்க காலனியில் உள்ள ஒரு  குடோனில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வடபாகம் காவல் நிலை யத்திற்கு வந்த ரகசிய தகவலின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சிவ ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று  சோதனையிட்டபோது அங்கு புகையிலைப் பொருட்கள் பண்டல் பண்டலாக பதுக்கி வைத்திருப்பது இருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக குறிஞ்சி நகரைச் சேர்ந்த மகராஜன் (36),  கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த சோலையப்பன் (33), பிர தீப்ராஜ் (22), ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.15 லட்சம் மதி ப்புள்ள புகையிலைப் பொருட்களையும், அங்கு நிறுத்தி  வைக்கப்பட்டிருந்த 4 கார்கள், 1 ஸ்கூட்டர் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வடபாகம் இன்ஸ்பெக்டர் அருள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி  வருகிறார்.