தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைந்து பொதுமக்களுக்கு கடந்த 30 நாட்களாக நிவாரண தொகுப்பு ஏற்பாடு செய்யும் பணியை இந்திய மாணவர் சங்கத்தினர் மேற்கொண்டனர். இந்நிலையில் 30-வது நாளன்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரத்த தானம் முகாம் நடத்தினர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஸ்ரீநாத், மாவட்டச் செயலாளர் ஜாய்சன், துணைத் தலைவர் மாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.