தூத்துக்குடி,ஆக. 5- தமிழகத்தின் மின்தேவை குறைந்துள் ளதால் தூத்துக்குடி அனல் மின் நிலை யத்தில் 2வது மற்றும் 4வது யூனிட்டில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெறுகிறது. இந்தியாவின் பழமையான அனல் மின் நிலையங்களில் ஒன்றான தூத்துக்குடி அனல் மின் நிலையம் கடந்த 1979-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரு கிறது. இங்கு 5 யூனிட்டுகளில் தலா 210 மெகாவாட் வீதம் 1,050 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வரு கிறது. இதில் உள்ள முதல் மூன்று யூனிட்டு கள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவைத் தாண்டியும் இயங்கி வருகிறது. இத னால், இவற்றில் அடிக்கடி பழுதுகள் ஏற்பட்டு மின் உற்பத்தி தடைபட்டு வருகிறது. இந்நிலையில் 31.11.2019 முதல் 5வது யூனிட்டில் கொதிகலனில் ஏற்பட்ட பழு தால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக் கப்பட்டது. ஏற்கெனவே, தமிழகம் முழுவ தும் பரவலாக மழை பெய்து வருவதால் மின்தேவை குறைந்துள்ளது. மேலும் 3வது யூனிட்டில் 31.07.2020 முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலை யில் 2வது யூனிட்டில் மின் உற்பத்தி திங்களன்று திடீரென நிறுத்தப்பட்டது. மின்தேவை குறைந்துள்ளதால் மின்வாரி யத்தின் அறிவுறுத்தலின் பேரில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.