tamilnadu

img

கொரோனா களப் பணியாளர்களுக்கு  நல உதவி வழங்கல்  

தூத்துக்குடி, ஆக.8- தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பாக முன்னாள் முதல்வர் கருணா நிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.  தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வைத்து வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினரு மான கீதாஜீவன் தலைமையில் கருணா நிதி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் கொரோனா களப் பணியாளர்கள் சுமார் 100 பேருக்கு கையுறை, முக கவசம், சோப் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப் பட்டது. இதில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலா ளர் ஆனந்த சேகரன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், ஆறு முகம், செயற்குழு உறுப்பினர் ஜெயக் குமார் ரூபன், தொண்டரணி ரமேஷ், பொறியாளர் அணி அன்பழகன், மகளி ரணி கஸ்தூரி தங்கம், மாநகர துணை  செயலாளர் கீதா முருகேசன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ரவீந்திரன் மாவட்ட பிரதிநிதி கதிரேசன், மாணவ ரணி துணை அமைப்பாளர் பாலகுரு சாமி, இளைஞரணி துணை அமைப்பா ளர் அருண் சுந்தர் கலந்து கொண்டனர்.