tamilnadu

img

பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி மீது நடவடிக்கை கோரி மாதர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி , ஜூன் 6 தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் 10 வயது  சிறுமியை 50 வயது ஸ்ரீரங்கன் பாலியல் வன்கொ டுமை செய்ததை கண்டித்து  மாதர்கள் ஆர்ப்பாட்டம்  நடத்தினர்.    பின்னர் வழக்கு பதிந்து ஸ்ரீரெங்கனை கைது செய்துள்ளார்கள் .எனவே குற்றவாளி மீது ஜாமீனில் வெளிவராத அளவு கடு மையான நடவடிக்கை எடுக்க வும் பாதிக்கப்பட்ட குடும்பத் திற்கு ரூ.10 லட்சம் நிவார ணம் வழங்க வேண்டும்,  குழந்தையின் படிப்புச் செல வுகளை அரசே ஏற்க வேண்டும்,  பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியில் ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பி. பூமயில் தலைமையில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.