tamilnadu

பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பக பதிவு

தூத்துக்குடி, ஜூன் 5-இந்த ஆண்டு மேல்நிலை வகுப்புத் தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவ,மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ,மாணவியர் தங்களுடைய கல்வித் தகுதியை வேலைவாய்ப்பக இணையதளம்   வாயிலாக தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாக பதிவுசெய்து கொள்ளலாம்.  இதற்கான ஏற்பாடுகள்பள்ளிக் கல்வித் துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணைந்துதகுந்த முன் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.பிளஸ் 2 மாணவ, மாணவியர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழைப் பெற பள்ளிக்குச் செல்லும் பொழுது தங்களது குடும்பஅட்டை, ஆதார் அட்டை, கைபேசி எண்,மின்னஞ்சல் முகவரி மற்றும் சாதிச் சான்றிதழினை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.  மேலும் தங்களது குடும்ப அட்டையில் பதிவுதாரரின் பெயர் இருப்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும். பத்தாம் வகுப்புகல்வித் தகுதியினை ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டையையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.03.06.2019 நாள் முதல் 17.06.2019 வரை வேலைவாய்ப்பு பதிவுப்பணி அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும்.  இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.