tamilnadu

ஜன.25  தேசிய வாக்காளர் தினம்

தூத்துக்குடி, ஜன.16- தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவரி 25 ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் சந்தீப்நந்தூரி தலைமையில் நடந்தது.  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில், தேசிய வாக்காளர் தினம் கொண்டாடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கி னார். கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்தி ரன், தூத்துக்குடி உதவி ஆட்சியர் சிம்ரான்ஜித்சிங் கலோன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் ஆட்சியர் சந்தீப்நந்தூரி பேசியதா வது:  இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தர வின்படி, ஜனவரி 25 ஆம் தேதி தேசிய வாக்கா ளர் தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் கொண்டா டப்பட உள்ளது. இந்த ஆண்டு ‘வலிமையான மக்களாட்சிக்கு தேர்தல் கல்வியறிவு‘ என்ற மைய கருத்தை வலியுறுத்தி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் விரைவில் வெளி யிடப்படும். அதன்பிறகும் வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்கள் பெயர் சேர்க்க தேவையான விழிப்புணர்வு பணிகளை அலுவலர்கள் மேற் கொள்ள வேண்டும் என்றார்.

;