tamilnadu

img

சிபிஎம் சார்பில்  நிலவேம்பு கஷாயம்  வழங்கல்

தூத்துக்குடி,அக்.23- தமிழகத்தில் பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகின்ற நிலையில் மக்களை டெங்குவில் இருந்து பாதுகாக்க தூத்துக்குடி மாநகர்   15வது வார்டில் சிபிஎம் செயலாளர் அழகுபாண்டியன் தலைமையில் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.இதில் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.முத்து,சிபிஎம் 15 வது வார்டு உறுப்பினர்கள் பூவலிங்கம் சாம்பசிவம், முருகன்,சங்கர், ஜவகர்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.