தூத்துக்குடி, ஜூன் 21- செய்துங்கநல்லூரில் தொடர்ந்து கொரோனா வை ரஸ் தாக்கம் அதிகரித்து வரு வதால் திங்கட்கிழமை (ஜூன் 22) முதல் ஒரு வார காலத் திற்கு கடைகளை அடைக்க தாசில்தார் உத்தரவு பிறப்பித் துள்ளார். இந்தியா முழுவதும் ஜீன் 30 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சில தளர்வுக ளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலை யில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவ ட்டங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற் கிடையில் செய்துங்க நல்லூரில் மீன் விற்பனை செய்தவர், டெய்லர் என கொ ரோனா தொற்று பரவ ஆரம்பித்து விட்டது. இதன் காரணமாக சனிக் கிழமை செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் திரு வைகுண்டம் வட்டாட்சியர் சந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், திங்கட்கிழமை(ஜூன் 22) முதல் தொடர்ந்து 1 வாரத் துக்கு முழு கடை அடைப்பு நடத்துவது என முடிவு செய்ய ப்பட்டது. திங்கட்கிழமையில் இருந்து முழு கடையடைப்பு நடத்த ஒத்துழைப்புதர வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. செய்துங்கநல்லூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா வந்தது. அதை தொடர்ந்து டெய்லர், பலசரக்குகடை, மீன் வியாபாரி மற்றும் ஏஜென்சி உரிமையாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத் தினை சேர்ந்தவர்களுக்கு நோய் பரவியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.