tamilnadu

img

சாத்தான்குளம் காவலர்களுக்கு விரைந்து தண்டனை வழங்குக...

தூத்துக்குடி:
சாத்தான்குளம் வியாபாரிகள் படுகொலையில் கைது செய்யப்பட்ட காவலர்களுக்கு தாமதம் செய்யாமல் உடனடியாக தண்டனை வழங்க  வேண்டும். காவல்துறையில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்னும் பிரிவை தடை செய்ய வேண்டும்.புதுக்கோட்டை அருகே 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்துதண்டனை வழங்க வேண்டும்.  பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றுவலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் சனிக்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க நகரச்செயலாளர் ஜெய்லானி கனி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் உமாசங்கர்,மாவட்டக்குழு உறுப்பினர் தினேஷ்குமார், வாலிபர் சங்க நிர்வாகிகள் கருத்தப் பாண்டி, மாரிச்செல்வம், ராஜா, சிவா,ரகு, அரவிந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;